×

'ஓவைசி கார் மீது 3 குண்டுகள் பாய்ந்தன' - மாநிலங்களவையில் அமித்ஷா விளக்கம்

டெல்லி: அசாதுதீன் ஓவைசியின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அசாதுதீன் ஓவைசியின் வாகனத்தின் மீது தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் கார்கேட் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஓவைசியின் வாகனத்தின் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தை 3 பேர் நேரில் பார்த்துள்ளனர். ஓவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசு வழங்கும் இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் என கூறினார்.


Tags : Owaisi ,Amitsha , '3 bombs dropped on Owaisi car' - Amitsha's explanation at the state level
× RELATED தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்...