×

வரும் மார்ச் மாதம் நிலவில் மோதும் தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட்: நாசா தகவல்

வாஷிங்டன்: தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட் ஒன்று வரும் மார்ச் மாதம் நிலவில் மொத இருப்பதாக நாசா கூறியுள்ளது. அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2015-ம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கை கோள் ஒன்றை பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவியது. செயற்கை கொள்ளை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பிறகு சில தொழில்நுட்ப காரணங்களால் ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.

இதனை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அந்த ராக்கெட்டை விண்வெளியிலேயே கைவிடுவதாக அறிவித்துவிட்டது. கட்டுபாட்டை இழந்த பால்கன்-9 ராக்கெட் பூமியும், நிலவையும் சுற்றிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் முன்பக்கம் நிலவில் மோத இருப்பதாக அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் ராக்கெட் மொத உள்ளது. சுமார் 4 டன் எடையுள்ள பூஸ்டர், நிலவினை நோக்கி மணிக்கு 9,290 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நிலவில் மோதுவது இது முதல்முறை அல்ல என்று கூறியுள்ள நாசா, பால்கன்-9 ராக்கெட் மோதுவதால் பெரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இருப்பினும் ராக்கெட் மோதலால் ஏற்படும் தாக்கத்தின் எதிரொலியாக நிலவின் மேற்பரப்பில் 30 முதல் 60அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்படும் என்று விண்வெளி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : NASA , Rocket collides with the moon, NASA information
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்