×

கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையெழுத்து இயக்கம்

புழல்: சோழவரம் அருகே ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் இருந்து வன்னிப்பாக்கம் செல்ல கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில், இதனை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பசுவன்பாளையம் கிராமத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்வதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாலும், வேலை, சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல சிரமமாக உள்ளதாலும்,    உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, அக்கட்சியினர் கூறுகையில்,  ‘தொடர்ந்து கிராம மக்களிடம் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து வாங்கி, அரசு அதிகாரிகளுக்கு அனுப்பபடும்’ என தெரிவித்தனர்.


Tags : Marxist ,Communist ,Manuscript Movement ,Kosala River , Marxist Communist Manuscript Movement urges construction of flyover on the Kosala River
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு