×

பொன்னை அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னை: பொன்னை அருகே குடிநீர் பிரச்னையை தீர்கக் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னை அடுத்த வெப்பாலை ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பெண்கள் குடிநீருக்காக பல கி.மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் கால்வாய்களில் குடங்களில் குடிநீர் கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் தண்ணீரை செமிக்காமல் வீணாகி சென்று விட்டது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடனே உரிய நடவடிக்கை எடுத்து வெப்பாலை ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnai , Demand for action to solve drinking water problem near Ponnai
× RELATED பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை