×

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே சர்ச்சில் புகுந்து சிலை உடைப்பு: போலீசார் விசாரணை

கோவை: கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே சர்ச்சில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே ‘ஹோலி டிரினிட்டி’ சர்ச் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே உள்ள கெபியில் கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த செபஸ்தியார் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சர்ச் துணை பங்குதந்தை பாஸ்டின் ஜோசப் (32) ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கெபியை சுற்றி துணியால் மூடினர். விசாரணையில், பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சர்ச்சில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சில் புகுந்து மர்மநபர்கள் சிலையை உடைத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Churchill ,Pugutu ,Govu Ramanathapuram , Statue breaking in church near Ramanathapuram signal in Coimbatore: Police investigation
× RELATED சர்ச்சில் பஸ் ஊழியர் கொலை தலைமறைவான வக்கீல் சரண்