விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரயிலில் அடிபட்டு மின் தொழிலாளி முருகன் (48) உயிரிழந்தார். இருப்பு பாதையை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து செங்கோட்டை சென்ற பொதிகை ரயில் மோதி முருகன் பலியானார். ரயில்வே போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.