செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்தது. கொரோனா பரிசோதனை செய்வதற்காக இரும்பு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தை இறந்தது. ஆனைமலையிலிருந்து கொண்டுவரப்பட்டு 13 ஆண்டாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுத்தை உயிரிழந்தது. ஏற்கனவே ஆண் சிங்கம் விஷ்ணு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்றும் இறந்துள்ளது.