சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பென்னி குயிக்கின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு சிலை நிறுவ சட்டப்படி உரிய ஒப்புதல் பெறப்பட்டது.