×

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு ஏமாற்றத்தை  அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதுடன், இலங்கை சிறையில் உள்ள  மீனவர்களை உடனடியாக மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை  தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு டிவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை சிறையில்  அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்  மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மீனவர்கள் விஷயத்தில் தாங்கள் தலையிட்டு  தமிழக மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.


Tags : Sri Lanka ,Union Government , Sri Lanka Prison, Tamil Nadu Fishermen, Union Government, Chief Minister's request
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...