×

க.திருநாவுக்கரசுக்கு பெரியார் விருது, நீதிபதி சந்துருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2021ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான பெரியார் விருது க.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு பெரியார் விருதை பெறுகிறார். 2006ல் தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருதை க.திருநாவுக்கரசுக்கு வழங்கி கவுரவித்திருந்தார் அப்பாதைய முதல்வர் கலைஞர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விருது தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விருது தொகையுடன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : KKA ,Trinavukarasu ,Ambedkar , Award
× RELATED தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை