×

காய்ச்சலால் கொரோனா என அச்சம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னை: திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் வசித்தவர் டெல்லி (74). இவரது மனைவி மல்லிகேஸ்வரி (64). இவர்களது மகள் நாகேஸ்வரி (34). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக, ஒரே மாதத்தில் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், மயிலாப்பூரில் வசிக்கும் மல்லிகேஸ்வரியின் அண்ணன் ஜெகதீசன் நேற்று முன்தினம் இரவு தங்கையை செல்போனில் தொடர்பு கொண்டபோது, மல்லிகேஸ்வரி செல்போனை எடுத்து பேசவில்லை. இதனையடுத்து, அவர் அந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் தனது அண்ணன் வெங்கட்ராமன் (78) என்பவருக்கு போன் செய்து இதுபற்றி கூறியுள்ளார்.இதனையடுத்து, வெங்கட்ராமன் மாடிக்கு சென்று பார்த்தபோது, டெல்லி, மல்லிகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோர் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், மூவரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மகள் நாகேஸ்வரியும் விவாகரத்து பெற்று தங்களுடன் வசித்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மூவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாத்திரை சாப்பிட்டும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு மூவருக்கும் காய்ச்சல் அதிகமானதால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என அச்சமடைந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. மேலும், போலீசார் மேற்கண்ட பிரச்னைகளால் தம்பதி, மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post காய்ச்சலால் கொரோனா என அச்சம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thirumullaivayal, Cholampedu Road, Delhi ,Mallikeswari ,Nageshwari ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...