பெரம்பலூர்: பொய் வழக்கில் கைது செய்து சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய பெரம்பலூர் காவல்துறையினருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் விதித்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பெரம்பலூர் காவல் ஆய்வாளர் மயில்சாமி, எஸ்.எஸ்.ஐ., எஸ்.ஐ. உள்பட 8 பேர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.