டெல்லி: நாட்டில் மதப்பிளவை ஏற்படுத்தும் வகையில் உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உ.பி. தேர்தல் 80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் நடக்கும் யுத்தம் என்று ஆதித்யநாத் பேசியிருப்பது கண்டனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. ஆதித்யநாத் பேச்சை குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
