சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சித்தார்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்தது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டி.ஜி.பி.யை அறிவுறுத்தி இருந்த நிலையில் சென்னை போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. சாய்னா நேவால், தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் பற்றி சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்ட கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.