×

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதில், தீவிரவாதிகள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி இன்றும்  தொடர்ந்தது. குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹசன்போரா பகுதியில்  தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததால், அங்கு விரைந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை சுற்றிவளைத்த வீரர்கள், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் எந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.இவர்கள் வைத்திருந்த ஏராளமான வெடிப்பொருட்கள்,  துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kashmir Kulkam district , குல்காம் ,தீவிரவாதிகள் ,பாதுகாப்புப் படை
× RELATED டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.