சென்னை: ஆய்வு செய்ய மூலவர் சிலையை ஆஜர்படுத்த உத்தரவிடுவதா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சிலைகடத்தல் வழக்கில் திருப்பூர் அருகேயுள்ள கோவிலின் பரமசிவன் மூலவர் சிலையை ஆய்வு செய்ய உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கண்டனம் தெரிவித்தார். ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கலாம்; சிலையை பீடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.