×

சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்: வாலிருடன் கட்டி புரண்டு பிந்து அம்மிணி சண்டை: கேரளாவில் நடுரோட்டில் நடந்த பரபரப்பு

திருவனந்தபுரம்:  சபரிமலை   சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணியுடன்   கட்டிப்புரண்டு சண்டை போட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம்  செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை  கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  நீக்கியது. இதையடுத்து, இளம்பெண்கள்  தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கேரள முதல்வர் பினராய் விஜயன்  கூறினார். அரசின் நடவடிக்கையை  கண்டித்து கேரளாவில் பெரும் கலவரம்  வெடித்தது. அப்போது, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து  அம்மிணி, கனக துர்க்கா ஆகிய 2  இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று  சபரிமலையில் தரிசனம் செய்தனர். இதையடுத்து, 2  பேருக்கும் கொலை  மிரட்டல் வந்தன. இதனால், 2 பேரும் பல மாதமாக  தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில், பிந்து  அம்மிணி மீது சமீபத்தில்  2 முறை தாக்குதல் நடந்தது. கொச்சி போலீஸ்  கமிஷனர் அலுவலகம் அருகே ஒருவர்  மிளகு ஸ்பிரே அடித்தார். கடந்த  மாதம் கோழிக்கோடு அருகே இவர் மீது ஆட்டோ மோதி  நிற்காமல் சென்றது. இதில்  காயமடைந்தார். நேற்று  முன்தினம் கோழிக்கோட்டில் மீண்டும் இவர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோழிக்கோடு  கடற்கரை அருகே வாகனத்தை  நிறுத்துவது தொடர்பாக இவருக்கும்,  வாலிபருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது.  அப்போது, 2 பேரும் கட்டிப்புரண்டு தாக்கி கொண்டனர். இதில் 2  பேருக்கும் காயம்  ஏற்பட்டது. வாலிபரின் செல்போனை பிந்து அம்மிணி தரையில்  போட்டு உடைத்தார். வாலிபரின் வேட்டியையும்  உருவினார். அடிதடி காட்சியை  பிந்து அம்மிணி தனது பேஸ்புக்கில்  பகிர்ந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட  வாலிபர் குடிபோதையில் இருந்ததாக  கூறப்படுகிறது. இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோழிக்கோடு, பேப்பூரை  சேர்ந்த மோகன்தாஸ், என்ற அந்த வாலிபரை கைது செய்தனர்.

Tags : Sabarimala ,Ammini ,Kerala , Woman who went to Sabarimala and caused a stir: Ammini fight after being tied up with her tail
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு