×

ஆலங்குடி அருகே வாரியில் தொப்புள் கொடியுடன் சிசு சடலம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருக்காகுறிச்சி வடக்கு தெரு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கூமத்தி வாரியில் தேங்கியிருந்த மழைநீரில் நேற்று தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரத்தில் வீசப்பட்ட நிலையில் ஆண் சிசு  சடலமாக மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த ரவி, வடகாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் சிசு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார்  வழக்கு பதிந்து பச்சிளம் குழந்தையை தண்ணீரில் வீசி சென்ற கல் நெஞ்சம்  கொண்ட தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.


Tags : Sisu ,Wary ,Aalangudi , Alangudi, umbilical cord, infant corpse
× RELATED பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு...