சென்னை: மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வில் உள்ளது என்று பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரலையில் பதில் அளித்தார்.