திருவாரூர்: நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பூவனூர் ரஜினியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீடாமங்கலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலரை மூன்று பைக்குகளில் வந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் தலை பகுதியில் சரமாரியாக வெட்டி தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.