×

செந்துறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை-ஆசிரியருக்கு வலைவீச்சு

செந்துறை : செந்துறை அருகே பள்ளி மாணவியிடம் ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட குறிச்சிகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று முதல் 8ம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாச புகைப்படங்களை காட்டி இரட்டை ஆர்த்த வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் டிஎஸ்பி மதன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நதியா, பாண்டியன் ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை செய்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினர்.இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜமாணிக்கம் தலைமறைவானார், மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர்.

Tags : Sendura , Sendurai: A teacher who sexually harassed a school student near Sendurai by showing pornographic photos has gone into hiding. This
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்!:...