கோவை: வாளையாறு ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ரூ.67,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வாளையாறு ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் இன்று காலை கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.67,000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை சாவடியில் பணமில்லாமல் வந்த காய்கறி வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சமாக காய்கறிகளை வாங்கியதும் தெரிய வந்தது.