×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் சற்று வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக ஓமிக்ரான் அதிகம் பதிவாகி உள்ள மாநிலங்களில் பட்டியலில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது.  டெல்லியில் ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், எனது பணியாளர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும், சில நாட்கள் நீங்கள் தனிமைப்படுத்திகொண்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்,என்று தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Chief Minister ,Aravind Gejriwal , டெல்லி ,முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...