×

பேரையூர் அருகே பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் சரண்

பேரையூர்: பேரையூர் அருகே பெண் சிசுவை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெற்றோர் சரணடைந்தனர். மதுரை மாவட்டம், பேரையூர், சேடபட்டி அருகே பெரியகட்டளையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (31). இவரது மனைவி கவுசல்யா (23). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த டிச. 21ம் தேதி கவுசல்யாவிற்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. கிராம செவிலியர் தடுப்பூசி போடுவதற்காக கவுசல்யாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது குழந்தை இறந்து விட்டது என கூறினர். இதனால் சந்தேகமடைந்த செவிலியர், விஏஓவிற்கு தகவல் கொடுத்தார். பெரியகட்டளை விஏஓ முனியாண்டி டிச. 27ம் தேதி சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் முத்துப்பாண்டியின் வீட்டின் அருகில் புதைக்கப்பட்ட பெண் சிசு உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ பேராசிரியர் நடராஜன் தலைமையிலான குழுவினர், சிசுவை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர். இதன்பிறகு முத்துப்பாண்டி - கவுசல்யா தம்பதி திடீரென மாயமாயினர். இருவரும் நேற்று பெரியகட்டளை விஏஓ முனியாண்டி முன் சரணடைந்தனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் ஒரு பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். பின்னர் விஏஓ அவர்களை சேடபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Charan ,Peraiyur , Peraiyur, female infanticide, parents, Charan
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...