சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக உள்ளது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரான் வந்தாலும் குறுகிய காலத்தில் நலம் பெறுகிறார்கள் எனவும் தெரிவித்தார். நோய் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கூறினார்.