×

பக்கத்து வீடுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு விவசாயி வீடு உடைத்து கொள்ளை: பொன்னேரி அருகே துணிகரம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பொன்னியம்மன் நகர் 4வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் முரளி. விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன், சென்னையில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் இவரது வீட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார். இன்று காலையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் கதவை தட்டியபோது திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர்.

சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த வீட்டினர் ஓடி வந்து கதவை திறந்தனர். அப்போதுதான் முரளியின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வந்து விசாரணை நடத்தி னர். முரளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்தால்தான் கொள்ளை விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.



Tags : Ponneri , Next door, farmer's house, robbery, ponneri,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்