×

விசிக வழங்கிய ரூ.50,000 விருது பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.50,000 விருது பணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 24ம் தேதி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் விருதுகள் வழங்கும் விழா-2021 நடந்தது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருதுடன், ரூ.50,000 வழங்கப்பட்டது. இந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட ரூ.50,000 விருதுப் பணத்தை, கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார். இத்தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Tags : Chief Minister ,Vizika ,Corona , The Chief Minister presented the Rs 50,000 award money given by Vizika to the Corona Relief Fund
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...