×

சண்டிகர் மாநகராட்சி தேர்தல்: பாஜவை பின்னுக்கு தள்ளியது ஆம் ஆத்மி

சண்டிகர்: பஞ்சாபில் நடந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களிலும், பாஜ 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் சண்டிகர் மாநகராட்சி தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மொத்தமுள்ள 35 வார்டுகளில் 14 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளனர். பாஜ வேட்பாளர்கள் 12 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அகாலி தளத்தை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெற்றிருப்பது, பஞ்சாப் மாற்றத்தின் அடையாளமாகும். மக்கள் நேர்மையான ஆம் ஆத்மியின் அரசியலை தேர்ந்தெடுத்துள்ளனர். ஊழல் அரசியலை நிராகரித்துள்ளனர். வெற்றி பெற்ற ஆம் ஆத்மியின் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.

Tags : Chandigarh Municipal Corporation Election ,Aam Aadmi Party ,BJP , Chandigarh Municipal Corporation Election: Aam Aadmi Party pushes BJP back
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...