திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே சேதம் அடைந்த பெரியார் சிலை சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் சிலையை சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் காலை போலீசில் சரண் அடைந்தார்.