×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 பேரலில் 5000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்  உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் இன்று கல்வராயன் மலைப்  பகுதிகளில் சாராய ரோந்து பணியில் ஈடுபட்டனர்‌. அப்போது குரும்பலூர்  மற்றும் ஏரிக்கரை தெற்கு  ஓடையில் 10 பேரலில்  5000 லிட்டர்  சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது‌‌. தொடர்ந்து 5000 லிட்டர் சாராய ஊறல் அதே இடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : Kallakurichi district , Counterfeit, 10 barrels, 5000 liters, alcohol
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...