×

காவலரிடம் லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம்  காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வேலாயுதம். இவர் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும், கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் ஒரு காவலரிடம்  சிவில் வழக்கு ஒன்றை முடித்து தருவதற்காக லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கடலூர் எஸ்பி சக்திகணேசனிடம் சம்பந்தப்பட்ட காவலர் புகார் அளித்தார். அதன்பேரில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து அவரை எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார்.

Tags : SSI , SSI suspended for soliciting bribe from policeman
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...