ஆலங்காயம்: ஆலங்காயம் வெள்ளகுட்டை அடுத்த மராட்டிபாளையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த புதர்களை வட்டாரா வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வெள்ளகுட்டை அடுத்த மராட்டிபாளையம் பகுதியின் பேருந்து நிழற்கூடம் பராமரிப்பின்றி, புதர்மண்டி காணப்படுவதாக 4 நாட்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
செய்தி எதிரொலியாக, விரைந்து நடவடிக்கை எடுத்த, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி பேருந்து நிழற்கூடத்தை உடனடியாக மறுசீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைக்கு இது அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.