×

ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை இறந்ததால் 2 குழந்தைகளுக்கு தலா ₹75 ஆயிரம் விபத்து காப்பீடு தொகை

*கலெக்டர் வழங்கினார்

ஆலங்காயம் : ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை இறந்ததால் அவரது 2 குழந்தைகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் விபத்து காப்பீடு தொகையை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் தந்தை விபத்தில் இறந்ததற்கான விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளை குட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் பயிலும் மாணவகள் முகுந்தன்(10), பிரவீன்(9) ஆகியோரின் தந்தை சமீபத்தில் விபத்தில் இறந்தார். இதனால் அவர்களுக்கு விபத்து காப்பீட்டு தொகையாக தலா ரூ.75 ஆயிரத்திற்கான வைப்பு பத்திரங்களை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் சென்று குழந்தைகளின் தாயார் கோகிலவாணிவிடம் வழங்கினார். அப்போது, எம்எல்ஏக்கள் தேவராஜி(ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை இறந்ததால் 2 குழந்தைகளுக்கு தலா ₹75 ஆயிரம் விபத்து காப்பீடு தொகை appeared first on Dinakaran.

Tags : Alangayam ,Dharpakaraj ,Tamil Nadu Electricity and Basic Facility Development Corporation ,
× RELATED வாணியம்பாடி அருகே பஸ்சில் தொங்கியபடி வாலிபர்கள் ஆபத்தான பயணம்