×

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு

ஜோலார்பேட்டை:  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு  உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு அவரது தாயார் அற்புதம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக பரோல்  வழங்க வேண்டும் என தமிழக அரசிடம்  கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி அவருக்கு  கடந்த மே  மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.  

மேலும் ஒவ்வொரு மாதமும் மருத்துவ சிகிச்சைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் பரோல் நீட்டிக்க மனு அளித்து வந்த நிலையில் 6முறை பரோல் நீடித்தது. இந்நிலையில் அற்புதம்மாள் கோரிக்கை ஏற்று நேற்று பேரறிவாளனுக்கு 7வது  முறையாக தமிழக அரசு 30 நாள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Perarivalan , perarivalan , parole, extension
× RELATED பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு...