×

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் தனியார் கூட்ட அரங்கில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ‌ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ‌அறிவுரை‌ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது‌.

ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். போலீசாருக்கு உதவுவதில் ஆட்டோ ஓட்டுநர்களின் பங்கு அதிகமாக உள்ளது என‌ காவல் துணை‌‌ கண்காணிப்பாளர் ராஜலட்சுமி ‌பேசினார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ‌பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Kallakuruchi , Auto driving
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...