திருமலை: தெலங்கானா மாநிலம், வராங்கலை சேர்ந்தவர் அஜய். இன்ஸ்டாகிராமில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இவனிடம் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஏமாந்து உள்ளனர். பாதிக்கப் பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் அவனை ஐதராபாத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.