×

34வது நினைவு நாளையொட்டி எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி: ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்பு

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே எம்ஜிஆர்  திருஉருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். 


Tags : Remembrance Day ,MGR Memorial , Tribute to the 34th Remembrance Day at the MGR Memorial: OBS, EPS Participation
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்:...