திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை முதல் பெருவழிப்பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.