புதுச்சேரி: திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.