சென்னை: உணவு கலப்படம் தொடர்பாக ஓட்டல்கள், மளிகை கடைகளில் மக்கள் புகாரளிக்க அதிகாரிகளின் செல்போன் எண்களை ஒட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவு கலப்பட புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருக்கிறார்.