அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியினை பள்ளியின் தலைமையாசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.மணமேல்குடி ஒன்றியம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆடல், பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் ஆகியவை மூலம் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வில் எவ்வாறு கற்பது என்ற விவரத்தினை தெரிவித்தனர்.
மாணவர்களிடையே கேள்விகள் கேட்டு கலைக்குழுவினர் உற்சாகப்படுத்தினர். கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்களுக்கு நோட்டு பேனா பரிசாக வழங்கினர். இல்லம் தேடி கல்வியினை தன்னார்வலர்கள் எவ்வாறு குடியிருப்புகளில் செயல்படுத்துவார்கள் என்பது பற்றியும் விரிவான கருத்துகளை பாடல்கள் மூலமாகவும் எடுத்துரைத்தனர். முடிவில் ஆசிரியர் திருமுகம் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.