×

திருச்சி தொழிற்சாலையில் நவீன ரக துப்பாக்கி கண்காட்சி துவக்கம்

திருவெறும்பூர்: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளூர் பொதுமக்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. நேற்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம்  கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன்படி கான்பூரில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா நிறுவனத்தின் (எ.டபுள்யூ.இ.ஐ.எல்) ஒரு அங்கமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஊழியர் கிளப்பில் கண்காட்சி துவங்கியது. இங்கு நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீன கால ஆயுதங்கள் வரை  இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகளை பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம். இதில் இடம்பெற்றிருக்கும் எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல், கப்பல் படையில் பயன்படுவதாகும். இது இஸ்ரேல் இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 450 முதல் 600 தோட்டாக்கள் வெளியேறும். இலக்கை குறி வைத்தால் தப்பாது. 2 கி.மீ. தூரத்தில் எதிரிகள் வரும்போது லேசர் மூலம் கண்காணித்து தாக்கக்கூடியது. மேலும் எதிரி நாட்டின் கப்பல்படையின் போர் கப்பல் இன்ஜினை தாக்கி செயல் இழக்க பெரிதும் உதவுகிறது.

Tags : Tirichi factory , Trichy, factory, modern, gun, exhibition
× RELATED காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு: 30 பேருக்கு காவல்துறை சம்மன்