×

2 மனைவிகள் இருக்கும் நிலையில் 3வது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: போலீஸ்காரர் டிஸ்மிஸ்

திருச்சி: திருச்சி அருகே இரண்டு மனைவிகளை ஏமாற்றி விட்டு, 3வது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ்காரர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் முத்துராஜாபாளையத்தை சேர்ந்தவர் நவீன்(33). இவர், சிறுகனூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு பட்டாலியன் காவலர் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து, ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றினார். 2013ம் ஆண்டு இவருக்கு முறைப்படி திருமணம் நடந்தது. முதல் மனைவிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியை தனது சொந்த ஊரான முத்துராஜாபாளையத்தில் உள்ள தனது பெற்றோரிடம் குடி வைத்துள்ளார்.

இதையடுத்து, 2016ம் ஆண்டு தா.பேட்டை பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து, முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. 2வதாக திருமணம் செய்த பெண்ணை முசிறி காவலர் குடியிருப்பில் வைத்துள்ளார். இந்நிலையில், சிறுகனூரில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு செல்லாமல், 3வது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த 2வது மனைவி, நவீன் குறித்து விசாரித்த போது, அவர் மூன்றாவது பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இரண்டாவது மனைவி, திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் செய்தார். ஐ.ஜி பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், திருச்சி எஸ்.பி சுஜித்குமார் நேரடி விசாரணை செய்தார். விசாரணையில், நவீன் 3வதாக ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து எஸ்.பி சுஜித்குமார், காவலர் நவீனை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டார்.


Tags : 2nd wife, 3rd wife, prostitution
× RELATED இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில்...