×

திருமயம் அருகே பஸ் மீது பைக் மோதி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி: விபத்தில் பஸ்சும், பைக்கும் தீப்பிடித்தது

திருமயம்: திருமயம் அருகே பஸ் மீது பைக் மோதி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் பஸ்சும், பைக்கும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்து போனது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 17 பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து திருமயம் அருகே உள்ள பாம்பாறு பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ் அடியில் சிக்கிய பைக் சிறிது தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து பஸ் மீதும் தீ பரவியதால் சிறிதுநேரத்தில் பஸ்சும் மளமளவென எரிந்து உருக்குலைந்து போனது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த  புதுக்கோட்டை அருகே உள்ள சின்னையா சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வம்(22), காரைக்குடியை சேர்ந்த மணிகண்டன்(22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Tags : Maryam , Thirumayam, accident
× RELATED ஆட்சி அமைப்பதில் இருந்த சிக்கல்...