திருச்சி: பூலோக வைகுண்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 7ம் திருநாள் உற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பொதுஜன சேவைசாதித்து வருகிறார்.