×

கேப்டன் வருண் சிங் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி; உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி.!

பெங்களூரு: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். கேப்டன் வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று  ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை  தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டார். தற்பொழுது கேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

Tags : Varun Singh ,Bangalore Hospital ,Government of the United States , Captain Varun Singh admitted to Bangalore Hospital; The United States Government has assured that high quality treatment will be provided.
× RELATED குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...