ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் சனத் நகர் என்ற இடத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாமில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எஃப். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின. நள்ளிரவில் பிடித்த தீ பல கட்டடங்களுக்கும் பரவியதால் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.