×

குன்னூர் கேத்தி பாலாடாவில் நடைபாதை இல்லாததால் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவதி

குன்னூர்:  குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் நடைப்பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.குன்னூர் அருகே உள்ள கேத்திபாலாடா பகுதியில் உள்ளது சிவசெந்தூர் நகர். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடைபாதைகள் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் சென்றுவர கடும் சிரமம் அடைகின்றனர்.

 அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கேத்தி பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்vது வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிவ செந்தூர் நகர் பகுதியில் ஒருவர் இறந்தார். இறந்தவரின் உடலை சுமந்து செல்ல அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். கன மழையால் பாதை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை சுமந்து சென்றனர். எனவே உடனடியாக கேத்தி பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு நடைபாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnur ,Kathy Palata , In Coonoor Kathy Balada People suffer from not being able to carry the body of the deceased due to lack of pavement
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!