திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோயில்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்த உடன் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தேவசம்போர்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.