சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு, தீவிரவாதம், சாதி மத மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.